உதவி செய்யுங்கள்

உதவி செய்யுங்கள்

மாதவரம் சட்டமன்ற தொகுதி, மணலி மண்டலம் 16-ஆவது வார்டுட்பட்ட சடயங்குப்பம் பர்மா நகர் பகுதியில் இருளர் காலனி உள்ளது. இங்கு சுமார் 40 இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் குடிசைவாசிகள், கூலித் தொழிலாளிகளான இவர்கள் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் வருவாய் இன்றி சிரமப்படுகின்றனர். இங்குள்ள பல குடும்பங்கள் நேற்று முதல் உணவும் இன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பசியால் வாடுகின்றனர் என தெரியவந்துள்ளது. தங்களுடைய சிரமங்களை வெளியே தெரியப்படுத்துவதற்கு கூட அவர்களுக்கு போதிய வசதி இல்லை.எனவே மாநகராட்சி, வருவாய் அதிகாரிகள், தன்னார்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் இவர்களுக்கு உதவி செய்தால் நல்லது. 🙏🙏🙏 நிருபர் எம்.பிரேம்.

%d bloggers like this: